Tuesday, 25 October 2016

அம்மன் பாடல் வரிகள்

அம்மன் பாடல் வரிகள்


அணுவிற்குள் அணுவும் நீ 
அண்டங்கள் அனைத்தும் நீ
ஆள்கின்ற அரசியும் நீ
கணுவிற்குள் கணுவும் நீ 
கரும்புக்குள் சுவையும் நீ
கருணைக்கு எல்லையும் நீ
விண்ணும் நீ மண்ணும் நீ 
விகசிக்கும் ஒளியும் நீ
வேதத்தின் மூலமும் நீ
பண்ணும் நீ பனுவல் நீ 
 புலவர்க்கு பொருளும் நீ
பாருக்கு அன்னையும் நீ
அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே
அன்புவடி வான உமையே
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

கன்றுக்கு பசுவாக குன்றுக்கு ஒளியாக
என்றைக்கு நீ வருவாய்?
மன்றாடும் பிள்ளைக்கு குன்றாத அன்பதனை
என்றைக்கு நீ தருவாய்?
மண்ணுக்கு மழையாக விண்ணுக்கு நிலவாக
என்றைக்கு நீ வருவாய்?
கண்ணுக்குள் ஒளியாக நெஞ்சுக்குள் சுடராக
என்றைக்கு நீ ஒளிர்வாய்?
இருளுக்குள் அகப்பட்டு பலவாறு வதைபட்டு
ஒளிஉன்னைத் தேடி வந்தேன்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

விழியுண்டு ஒளியில்லை இருளுண்டு விளக்கில்லை
வழிகாட்ட நீ வருவாய்
விதியுண்டு கதியில்லை மருளுண்டு தெளிவில்லை
மருள்நீக்க நீ வருவாய்
நதியுண்டு நீரில்லை நிலமுண்டு பயிரில்லை
வளம்சேர்க்க நீ வருவாய்
சதிசெய்யும் மதியுண்டு மதிசெய்யும் வலியுண்டு
வலிதீர்க்க நீ வருவாய்
கதியென்று யாருண்டு உனையன்றி எவருண்டு
காப்பாற்ற நீ வருவாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

வேரற்ற மரமாகி வீழ்ந்து விட்டேன் அம்மா
வேராக நீ வருவாய்
நோயுற்ற உயிராகி நொந்து விட்டேன் அம்மா
மருந்தாக நீ வருவாய்
பாதையற்ற வழியில் பயணிக் கின்றேனம்மா
பாதையாய் நீ வருவாய்
நாதியற் றிவ்வுலகில் நலிந்து விட்டேனம்மா
நலம்செய்ய நீ வருவாய்
பேதையென் குரல் கேட்டும் பேசாமலிருப்பதுவும்
தாயுனக் கழகுதானோ?
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

ஏதொன்றும் அறியாமல் நான்செய்த பிழைய                        
[07:27, 10/26/2016] +91 99944 36909: பொறுத்தருள வேண்டுமம்மா
தீதென்று அறியாமல் தீவினையில் வீழ்ந்தஎன்னை
காத்தருள வேண்டுமம்மா
அகிலங்கள் அனைத்துக்கும் அன்னையே உன்னையே
சரணென்று பணிந்து விட்டேன்
ஆகாய கங்கையென பொங்கிவரும் உன்கருணை
மழைநனைய வந்து விட்டேன்
நொடியு மகலாதஅன்பை யுந்தன்திரு வடிகளிலே
தந்தெனக்கு அருளிடு வாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே                        
[07:41, 10/26/2016] +91 99944 36909: மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

Sunday, 23 October 2016

சக்தி மந்திரம்

கீழ்வரும் சுபமந்திரத்தை அனுதினமும்"இருட்டறையில்" 1 மணி நேரம் உச்சரிக்க வேண்டும். இதனால் நமக்கேற்படும் "நற்பயனும் பலனும்"மனம் ஒரு நிலைப்படும். துயரங்களேற்பட்டாலும் ஒரு சிலமணி நேரங்கள்தான்நீடிக்கும். அடுத்த மணி நேரத்திற்குள் அத்துயரங்களை துரத்தி மனதுக்கு சாந்த நிலையைத் தருவது மட்டுமல்லாமல், நமக்கேற்பட்ட ஏற்படவிருக்கின்ற பகையாளிகள், நம்மையெதிர்த்து நமக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள். எப்படி? இச் சுபமந்திரத்தை சித்தி செய்வதின் மூலமே ! நமக்கு இன்னார் தான் பகையாளிகள் என்றறிந்தால்,அவர்களை நேருக்குநேர் அவர் கண்களை உற்று நோக்கி கலந்துரையாடல் செய்தோமானால், அவர் உயிர்காப்பான் தோழனாக மாறிவிடுவார்கள். வீம்பான பகையாளிகளை நட்புறவுக் கொள்ள பயன்கொள்ள வேண்டாம். நம்மோடு நகமும் சதையுமாக பலகாலம் உறவோடிருந்து, வேண்டாதவர்கள் செய்த கலகத்தினால் பகைப் பெற்று பிரிந்தார்களே! அவர்களுக்காப் பயன்படுத்தி, அவர்கள் மீண்டும் நட்பானதும் பகைக்கான காரணத்தை விளக்கிச் சொன்னால் எடுத்துக் கொள்வார்கள். இச்சுபமந்திரம் சித்தியாக "இருட்டறை அப்பியாசம்" என்று பெயர். இச்சுபமந்திரத்தை உச்சரித்து ஜெபிக்க எண்ணிக்கையோ, காலஅளவோ கிடையாது. ஜெபம், அனுதினமும் செய்ய செய்ய, ஒரு சிறு ஒளி நம் கண்முன்னே தோன்றும் வரை செய்ய வேண்டும்.

சுபமந்திரம்

ஓம்சக்தி உலகசக்தி ஆதிசக்தி ஆக்ஞாசக்தி
சிவசக்தி சித்தசக்தி வாக்குசக்தி வசியசக்தி
எண்ணிய எண்ணம் எண்ணிய படியே என்னைப் பகைத்தோர்
எனக்குற வாகவே என்னை நினைத்தோர் என்வசமாகவே இசைந்துநடக்க நானே நீயாய் நீயே செய்செய்

குறிப்பு: கீழ்த்தரமான தகாத எண்ணங்கொண்டு இச்சுபமந்திரத்தைப் பிரயோகிக்க எண்ணுபவர்கள், சித்தர்கள், ரிஷிகள், ஞானிகளின் சாபத்திற்காளாக நேரிடும் என்று மனதில் நினைவுக் கொள்ள வேண்டும்.

Monday, 3 October 2016

சுண்டல்

நவராத்திரி சிறப்பு 16வகையான சுண்டல் வகைகள் மற்றும் தேங்காய் பாயாசம் செய்வது பற்றி பார்ப்போம்

மகிழ்ச்சியான நேரம் சூழ்ந்த இந்த நாட்களில் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உங்கள் பொன்னான கைகளால் பக்குவத்துடன் இந்த சுண்டல் வகைகளை தினமும் ஒன்று வீதம் செய்து அவர்களுக்கு தந்து சாப்பிட செய்து அவர்கள் பாராட்டை அள்ளிச் செல்லுங்களேன்

நவராத்திரி ஸ்பெஷல் தேங்காய் பாயசம்

நவராத்திரிக்கு படைக்கும் நைவேத்தியங்களை பற்றி பார்க்கலாம்.

இன்று தேங்காய் பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய் - 2
நெய், முந்திரி, திராட்சை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - ஒரு கப்

செய்முறை :

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து வைக்கவும்.

* வெல்லத்தை துருவி வைக்கவும்.

* பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவையுங்கள்.

* ஊறவைத்த பச்சரியுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்றாகக் கொதிக்கும்போது அரைத்துவைத்திருக்கும் பச்சரிசி தேங்காய் கலவையை அதில் சேர்த்துக் கைவிடாமல் கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

* நன்றாக வெந்ததும் வறுத்த வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேருங்கள்.

* அடுத்து அதில் துருவிய வெல்லம் சேர்த்துக் கரைந்ததும் இறக்கிவையுங்கள்.

* விரும்பினால் ஆறியதும் சிறிதளவு பால் சேர்க்கலாம்.

* இனிப்பான தேங்காய் பாயசம் ரெடி.

நவராத்திரி சுண்டல் வகைகள்  ஸ்பெஷல்:
1. கொண்டைக்கடலை ஃப்ருட் சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய வெள்ளை கொண்டக்கடலை-ஓரு கப்,
ஆப்பிள்(சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)-ஒன்று,
மாதுளை முத்துக்கள்-2 டேபிள்ஸ்பூன்,
திராட்சைப்பழம்-20,
வாழைப்பழம்(சிறிய துண்டுகளாக நறுக்கிக்  கொள்ளவும்)-ஒன்று,
சாட் மசாலா-ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு- ஒரு டேபிள்ஸ்பூன்,
தேன்-ஒரு டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய கொண்டக்கடலையை சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து ஆவியில் வேக விடவும். ஒரு  பாத்திரத்தில் வெந்த கடலை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள், திராட்சை, சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கினால் டேஸ்டி கொண்டக்கடலை-ப்ருட் சுண்டல் ரெடி இது, டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு.

2. சிவப்பு சோயா சுண்டல்

என்னென்ன தேவை?

உரித்த சிவப்பு சோயா பீன்ஸ்-ஒரு கப்,
இஞ்சி துருவல்-ஒரு டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய்-2,
கரம் மசாலாத்தூள்-ஒரு  டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு,
சோம்பு-கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

உரித்த சிவப்பு சோயா பீன்ஸை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய் தாளித்து..... இஞ்சித் துருவல், வெந்த சோயா பீன்ஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

3. ஸ்வீட் கார்ன் சுண்டல்

என்னென்ன தேவை?

ஸ்வீட் கார்ன்-1 கப்,
பச்சை மிளகாய்-2,
புதினா, கொத்தமல்லி-சிறிதளவு,
சோம்பு-கால் டீஸ்பூன்,உப்பு, தேங்காய் துருவல்-3, டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

ஸ்வீட் கார்னை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளித்து வெந்த கார்ன், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, புதினா, தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கினால் டேஸ்டி கார்ன் சுண்டல் தயார்.

4. பட்டர் பீன்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை?

உரித்த பட்டர் பீன்ஸ்- ஒரு கப்,
சோம்பு-கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

உரித்த பட்டர் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சோம்பு, கறிவேப்பில்லை, இஞ்சித் துருவல் தாளித்து வெந்த பட்டர் பீன்ஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

5. பச்சைப்பயறு பனீர் சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சைப்பயறு-ஒரு கப்,
பனீர் துருவல்-முக்கால் கப்,
இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-2, சீரகம்-கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய பயறை ஆவியில் வேகவுடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம்,  காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சித் துருவல் சேர்க்கவும். வெந்த பாசிப்பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். கரம் மசாலாத்தூள், பனீர் துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

6. கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

என்னென்ன தேவை?

கறுப்பு கொண்டைக்கடலை- ஒரு கப்,
சோம்பு-கால் டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய்-தலா ஓன்று,
புதினா-சிறிதளவு,
காய்ந்த மிளகாய்-3,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

கடலையை 6-8 மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் வேக வைக்கவும். வெந்த கடலையை தண்ணீரை வடியவிட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை,கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலை, தேவையான உப்பு சேர்த்துக்கிளறி, தேங்காய் துருவலை தூவி இறக்கினால் மசாலா சுண்டல் தயார். விருப்பப்பட்டால் கரம் மசாலாத்தூளும் சேர்க்கலாம்.

7. வேர்க்கடலை சுண்டல்

என்னென்ன தேவை?

பச்சை வேர்க்கடலை-ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-3,
தனியா-2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு-தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2,
டேபிள்ஸ்பூன், கறிவேப்பில்லை, கொத்தமல்லி-சிறிதளவு,
கடுகு, பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

பச்சை வேர்க்கடலையை 3 மணி நேரம் ஊறவிவும்.பிறகு, உப்பு சேர்த்து வேகவிடவும். மிளகாய், தனியா,கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை தாளித்து, வெந்த வேர்க்கடலை, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி மேலும் சிறிது நேரம்  கிளறி இறக்கவும்.

8. மக்காச்சோள சுண்டல்

என்னென்ன தேவை?

மக்காச்சோளம்-ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு,
சீரகம், பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை- சிறிதளவு,
தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்,
உப்பு- தேவையான அளவு.

அரைக்க:

இஞ்சி-சிறிய துண்டு,
பச்சை மிளகாய், பூண்டு பல்-தலா 2,
சோம்பு-கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்.

எப்படி செய்வது?

மக்காச் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் வேக வைகடகவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு,உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை தாளித்து..வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்புச் சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு கிளறி விடவும். 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல்தூவி இறக்கவும்.

9. சோயா பீன்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை?

வெள்ளை சோயா பீன்ஸ்-ஒரு கப்,
இஞ்சி-பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு, கிராம்பு,
ஏலக்காய்-தலா ஓன்று,
மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்,
தனியாத்தூள்-அரை டீஸ்பூன்,
கறிவேப்பில்லை, புதினா-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
உப்பு,எண்ணெய்- தேவையான அளவு.

எப்படி செய்வது?

சோயா பீன்ஸ் முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... கறிவேப்பில்லை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு ணிசேர்த்துக் கலக்கவும். மசாலா நன்கு கலந்தவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால் சத்துமிக்க மசாலா சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி!

10. பச்சைப்பயறு சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சைப்பயறு-ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்-தலா கால் டீஸ்பூன்,
இஞ்சித் துருவல்- 2 டேபிள் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பில்லை- சிறிதளவு,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய  பச்சைப்பயறை குக்கரில் வேக வைத்து எடுக்கவும் வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பில்லை சேர்க்கவும். வேக வைத்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சத்தாடபச்சைப்பயிறு சுண்டல் ரெடி!

11. தக்காளி சோயா பீன்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை?

சோயா பீன்ஸ்- ஒரு கப்,
தக்காளிச் சாறு-கால் கப்,
மிளகாய்தூள்-ஒரு டீஸ்பூன்,
சீரகம்- கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை, புதினா-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

சோயா பீன்ஸை 10 மணி நேரம் ஊற வைத்து, பிறகு குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி சீரகம், கறிவேப்பில்லை, புதினா தாளிக்கவும். தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வெந்த பீன்ஸ், உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து வந்ததும் தேங்காய் துருவல் தூவி  இறக்கவும். தக்காளி சுவையுடன் வித்தியாசமான சுண்டல் தயார்!

12. கோதுமை சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய கோதுமை- ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா கால் டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய்-2,
தக்காளி-ஒன்று(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
வெங்காயம்-ஒன்று(நறுக்கிக் கொள்ளவும்),
கறிவேப்பில்லை -சிறிதளவு,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பில்லை சேர்த்துக் கிளறவும். வெந்த கோதுமை, உப்பு சேர்த்து, (விருப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். டயாபடீஸ் உள்ளவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.

13. கறுப்பு உளுந்து சுண்டல்

என்னென்ன தேவை?

கறுப்பு முழு உளுந்து-ஒரு கப்,
பச்சை மிளகாய்-2,
இஞ்சி-சிறிய துண்டு, சீரகம், கடுகு-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். உளுந்தை 8 மணி  நேரம் ஊறவிடவும். பிறகு, குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பில்லை தாளித்து வெந்த உளுந்து, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சோத்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த சுண்டல் இடுப்பு எலும்புக்கு பலம் தரும். பெண்களுக்கு ஏற்ற சத்தான சுண்டல் இது.

14. டிரை ஃப்ருட்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சைப் பயறு-ஒரு கப்,
நறுக்கிய பாதாம், முந்தரி, பிஸ்தா, உலர் திராட்சை-தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
பேரீச்சை-10,
உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய பாசிப்பயறை உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து , ஆவியில் வேக வைக்கவும். வெந்த பயறுடன் முந்தரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, நறுக்கிய பேரீட்சை துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும். தேங்காய் துருவல் தூவி அலங்கரிக்கவும்.

15. பார்லி வேர்க்கடலை சுண்டல்

என்னென்ன தேவை?

பார்லி-ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை-அரை கப்,
சீரகம், சோம்பு-தலா கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய்-2 நறுக்கிய கொத்தமல்லி-சிறிதளவு,
இஞ்சி துருவல்- அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

ஒரு மணி நேரம் ஊற வைத்த பார்லி, வறுத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும். எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு,பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த பார்லி, வேர்க்கடலை சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி,(விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்க்கவும். கர்ப்பிணி பெண்களுக்கும், நீர் பிரியாமல் சிரமப்படுபவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.

16.ஜவ்வரிசி சுண்டல்

நவராத்திரிக்கு பூஜை செய்யும் போது, பிரசாதமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும். ஜவ்வரிசி சுண்டல் கொடுத்தால் சற்று வித்தியாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

* ஜவ்வரிசியை இரவில் படுக்கும் போதோ அல்லது 4 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். அதுவும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

* பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்த, பின் அதில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பருப்பானது நன்கு வெந்ததும், நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஜவ்வரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, குறைவான தீயில் உலர்த்த வேண்டும்.

* பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து ஒருமுறை கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

* கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், ஜவ்வரிசி சுண்டல் ரெடி!!!

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பிறந்த வரலாறு ஒரு பார்வை*.
*அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர்-ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல*.
பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். *ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்*.
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்ததுதான்.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க…. அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பதுதானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகஸ்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார்.
*ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்*.
பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப் படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா ஸஹஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. ஹயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம் செய்வதாக 182 1/2 சுலோகங்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது.
*அகஸ்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள்* (லோபாமுத்ரார்ச்சிதா – லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உண்டு). தேவியின் கட்டளைக்கிணங்க வாசினி முதலான வாக்தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாகவும் புராணக் குறிப்பு உண்டு.
இந்த நூலுக்கு எழுதப் பட்டிருக்கும் உரைகளில் தலைசிறந்ததாக விளங்குவது பாஸ்கர ராயர் எழுதிய *சௌபாக்ய பாஸ்கரம்* என்ற உரை. பாஸ்கர ராயர் (பொ.பி* 1690 – 1785) மிகப் பெரிய தேவி உபாசகரும், தத்துவ ஞானியும், அறிஞரும் ஆவார். இவர் மகாராஷ்டிரத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு தன் குருநாதரைத் தேடி வந்தடைந்தார். காவிரிக் கரையில் நீண்ட நாள் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த ஊர் பாஸ்கரராஜபுரம் என்று இன்றளவும் வழங்கப் படுகிறது. (* பொ.பி – பொதுயுகத்துக்குப் பின் – Common Era, Circa).
*ஸஹஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா ஸஹஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது*. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. *வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை*. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்துள்ளது.
*லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது*.
ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் –
*ஸ்ரீமாதாவின் அவதாரம்*
*கேசாதி பாத வர்ணனை* (ஸ்தூல ரூபம்)
*பண்டாசுர வதம்*
*மந்த்ர வர்ணனை* (சூட்சும ரூபம்)
*குண்டலினீ ரூபம்*
*பக்த அனுக்ரஹம்*
*நிர்க்குண உபாசனை*
*சகுண உபாசனை*
*பஞ்சப்ரஹ்ம ரூபம்*
*க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம்*
*பீடங்களும், அங்க தேவதைகளும்*
*யோகினீ தியானம்*
*விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்*
*சிவசக்தி ஐக்கியம்*
தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா ஸஹஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது.
*சிதக்³னிகுண்ட³ ஸம்பூ⁴தா – அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள், ராக³ஸ்வரூப பாசா'ட்⁴யா – ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள், க்ரோதா⁴கார அங்குசோ'ஜ்வலா – தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள், மனோரூப இக்ஷு கோத³ண்டா³ – மனமாகிய கரும்புவில்லை உடையவள், பஞ்சதன்மாத்ர ஸாயகா – ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள்*.
பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்!.
தத்துவ அளவில் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப்பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின் ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம்.
*நிர்த்³வைதா – த்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள், த்³வைத-வர்ஜிதா – இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள், ஸாமரஸ்ய பராயணா – சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே*.
*இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும். அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்.*
தத்துவங்களே அன்னையின் இருக்கைகளாகவும் (தத்வாஸனா), காற்சிலம்பின் மணிகளாகவும், கையில் ஏந்தி விளையாடும் பூக்களாகவும், மகா காளிக் கோலத்தில் அவள் அணியும் மண்டையோட்டு மாலைகளாகவும் ஆகிவிடுகின்றன!
அதுவே லலிதா ஸஹஸ்ரநாமம் அளிக்கும் பரவச அனுபவம். இந்த துதியைப் பொருள் உணர்ந்து படிக்கும் போதும், தியானிக்கும் போதும் தர்க்க மனத்தின் எல்லைகளுக்கு அப்பால் அது சுழன்றடித்துச் செல்கிறது. பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிற்து.
*தத்துவங்களின் பெருவெளியாக லலிதா ஸஹஸ்ரநாமம் இருக்கிறது.*
மூலப்ரக்ருதி என்னும் ஆதி இயற்கை வடிவானவள் – மூலப்ரக்ருதி:. இந்த ஆதி இயற்கை வெளிப்பட்டும், வெளிப்படாமலும் உள்ளது – வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணி. வெளிப்படும் பேரியற்கை எங்கும் வியாபித்தும் (வ்யாபினீ), பல்வேறு வடிவாகவும் (விவிதா⁴காரா) உள்ளது. இந்த ஆதி இயற்கையை யாராலும் முழுமையாக அறிந்து விட முடியாது. அதற்கு பிரக்ஞை என்னும் முழுமை அறிவு தேவைப் படுகிறது, அந்த அறிவு வடிவானவள் – ப்ரக்ஞான-கன-ரூபிணீ. *இது சாங்கிய தரிசனம்*.
அந்த முழுமை அறிவு அனுபூதியில் கைகூடும்போது, அறிபவன், அறிவு, அறிபடுபொருள் அனைத்தும் ஒன்றாக ஆகி விடுகிறது – த்⁴யான த்⁴யாத்ரு த்⁴யேய ரூபா. தர்மம், அதர்மம் போன்ற இருமை நிலைகள் நீங்கி விடுகின்றன – த⁴ர்மாத⁴ர்ம விவர்ஜிதா. *இது வேதாந்த தரிசனம்*.
பசு'பாச' விமோசனி – பசுக்களாகிய ஜீவர்களின் பாசம் என்னும் தளையை விடுவிப்பவள். சி'வஞான ப்ரதா³யினி – சிவஞானத்தை அளிப்பவள். இது *சைவ சித்தாந்தம்*.
என்ன செய்கிறேன்? எப்படி ஒருவன் சிந்தித்து, தர்க்கித்து அப்படி ஒரு பெயரை உருவாக்க முடியும்? வானத்திலிருந்து நட்சத்திரம் உதிர்ந்து நீர்த்தடாகத்தில் நீலத் தாமரையாக மறுநாள் பூத்தெழுவது போல அது வரவேண்டும். மேகச் சுவர்களைப் பிளந்து மின்னல் சாணிக்குழிக்குள் விழுந்து தங்கத்தூணாக மாறுவது போல வரவேண்டும்… அந்தப் பாறைமீது, தனிமையில். வானம் மோனத்தில் மூழ்கியிருக்கும் நிலவு நாளில். அவள் முகத்தை நினைத்தபடியே இருக்கவேண்டும். அவளையன்றி வேறு எதையும் மனம் தீண்டாத ஒருமை கூடவேண்டும். மனப்பொந்திலிருந்து மின்மினிகள் கிளம்புவது போல ஒருவேளை என்னிலிருந்து அப்போது பெயர்கள் பீரிட்டெழக் கூடும்.
*ஆயிரம் பெயர்கள். ஸஹஸ்ரநாமம். லலிதா ஸஹஸ்ரநாமம் எழுதியவன் அப்படித் தான் அடைந்திருப்பான். ஒவ்வொரு பெயரும் பிறிதில் பிரதிபலிக்கும் ஆயிரம் பெயர்கள். அவை கணந்தோறும் கலந்து பிறக்கும் கோடானுகோடிப் பெயர்கள். அப்பெயர்கள் எல்லாம் இணைந்து ஒன்றாகும் ஒரு பெயர். அப்பெயரில் இல்லாத எதுவுமே எங்குமில்லை. அப்படிப் பட்ட பெயர். அது தான் அவள் பெயர்*

Friday, 5 August 2016

அம்பாளை வணங்க

ॐ வணக்கம்.

• அம்பாளை வணங்க அறியாமை விலகும் 

• ஆனந்தம் பெருகும்

• இருள்கலும்

• ஈசனருள் பெருகும்

• உண்மை விளங்கும்

• ஊழ்வினை துலங்கும்

• எப்போதும் மலர்ந்திருப்பாய்

• ஏகாந்தத்தில் கலந்திருப்பாய்

• ஐம்பூதங்களும் உன்வசமாகும்

• ஒன்றினுள்ளோன்றாவாய் 

 ஓங்காரத்துட்பொ
ருள தானுரைப்பாளே  

•ஒளடதமாயுன்னோய்த்தீர்ப்பாளே

 அ
தே அம்பாளின் மகிமையுமேதானறிவாய் 

Tuesday, 2 August 2016

ஸ்ரீ சக்கரம் ஸ்ரீயந்திரம் Sri Chakram Sri Yandhra

ஸ்ரீ சக்கரம்

(நான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு)

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி
சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ
சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய
ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய
சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ!
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ!!
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ!!!

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்!

 யந்திர ராஜாய வித்மஹே
மகா யந்திராய தீமஹி
தன்னோ யந்திர ப்ரசோதயாத் - என்றும்

மந்திர ராஜாய வித்மஹே
மகா மந்திராய தீமஹி
தன்னோ மந்திர ப்ரசோதயாத் - என்றும்

யந்திரங்களில் எல்லா யந்திரங்களுக்கும் (கணபதி யந்திரம், முருகன் யந்திரம் முதலான) தலையாயது ஸ்ரீ சக்ர யந்திரம், எனவே யந்திர ராஜம் எனப்பெயர்.

 அதுபோல நமது சமய வழிபாடுகளில் அனைத்து மந்திரங்களுக்கும் ஸ்ரீ வித்யா மந்திரமே தலையாயது என்பதால் மந்திர ராஜம் எனும் இவ்வழிபாடு சிறப்பு பெறுகிறது.

சிதம்பரம் பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் நடராஜர 14 தடவை தனது டமருகத்தை அடித்து ஒலி எழுப்பினார் . முதலில் ஒன்பது தடவையும் பின்னர் ஐந்து தடவையும் மங்கள ஒலி எழுப்பினார்.

 ஒன்பது என்பது தேவிக்குரிய நவாக்ஷாரி
ஐந்து என்பது சிவனுக்குரிய பஞ்சாட்சரம்

மேலும் தனது இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அன்னைக்குரிய இடது காலால் நடராஜர் அருள் பாலிக்கிறார்.

சக்திக்குரிய நவாக்ஷரி மந்திரத்தை முன்னிலைப்படுத்திய நடராஜர், அருள் பாலிப்பது சக்தியின் மூலமே என்பதைப் போல இடது காலை தூக்கி ஆனந்த நடனமாடி அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹாசாம்ராஜ்யம்.

 இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு.

ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் , சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.

சௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கரர் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல்லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மகாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார்.

 ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார்.

ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து "த்ரியம்பக" மந்திரத்தினால் பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்

பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.

 தேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீகணபதி தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள் .

ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம் மகா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்.

நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர்.

 இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ர மஹாமேரு.

ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும்.

குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீ சக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.

ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்பது தனி சிறப்பு.




Friday, 22 July 2016

ஆதி சக்தி



துதி:-
ஓம் ஆதி சக்தியே
ஓம் ஆதார சக்தியே
ஓம் ஓங்கார வடிவே
ஓம் கலை வாணியே
ஓம் காயத்ரி தேவியே
ஓம் சித்தியளிப்பவளே
ஓம் சீதளா தேவியே
ஓம் முக்தியளிப்பவளே
ஓம் மூகாம்பிகைத் தாயே
ஓம் ஞான சக்தியே
ஓம் ஞானேஸ்வரியே
ஓம் நாத விந்துவே
ஓம் நான்மறை நாயகியே
ஓம் நிறைவளிப்பவளே
ஓம் நித்ய சுமங்கலியே
ஓம் பிள்ளைக்காளியம்மனே
ஓம் பிரணவப்பொருளே
ஓம் ஜகத் ஜனனீ ஜெகதீஸ்வரியே

Sunday, 17 July 2016

ஆழ்மனம் Cure all


 நாடும் நாட்டுமக்களும் நலமாக இருக்க பஞ்ச பூதங்களை வழிபாடு செய்திருக்கிறீர்களா நாடு நல்லாயிருந்தா நீங்களும் நல்லா இருப்பீர்கள் பெய்கின்ற மழை புரிந்து கொண்டு மந்திரத்தை சொல்லுவோம் அல்லது ப்ரார்த்தனை செய்வோம்

ஓம் ஜலபிம்பாய வித்மஹே 
நீல புருஷாய தீமஹி
தந்நோஹ் வருணஹ் ப்ரசோதயாத் 

உங்களால் முடிந்த அளவு சொல்லுங்கள் அலுவலகத்தில் இருந்தால் உணவு இடைவேளையில் தினந்தோறும்  சொல்லுங்கள்

++++++++++++++++++++++++++++++++++
எந்த  .வியாதியாக  இருந்தாலும். . .

இரவு   உறங்கச் செல்லும் முன்  ..

உங்கள்   கடைசி   சிந்தனையில் ..

நான்      ஆரோக்கியம்     அடைந்து  கொண்டு   வருகிறேன்  .  என்  உடல்  . ..முன்பை  விட   புத்துணர்ச்சி   அடைந்து     வருகிறது. .
.
என்ற    உணர்வுடன்   ..நீங்கள் ....உறங்க  ஆரம்பித்து  ..விட்டால்  .. .

உங்கள்  ஆழ்மனம்.    நீங்கள்   நினைத்ததை   உண்மை  என  நம்பி   .  .பொழுது  விடிவதற்க்குள்  .....

உங்கள்  உடலில்    ஆரோக்கியத்தையும்

புத்துணர்வையும்   ஏற்படுத்தி  விடும். .
https://www.youtube.com/watch?v=mHzmdhDYD5A
https://www.youtube.com/watch?v=liZ3pUkxKTA



https://www.youtube.com/watch?v=9pivzY4DAaE&list=PL3MpdfjVlOHKn2fZxBXiJ35EKyHZquifP


https://www.youtube.com/watch?v=0633ug1QQzQ

https://www.youtube.com/watch?v=dglfw4XspC4

Saturday, 16 July 2016

ரேணுகாதேவி

ரேணுகாதேவி புராணம்  
விதர்ப்ப தேசத்து அரசர் ஜராவதன். அவருடைய மகள் ரேணுகாதேவி. தன் மகளுக்கு நல்ல மணாளனைத்  தேடிக்கொண்டு இருந்தார் அரசர். அப்போது ஒருநாள், ரேணுகாதேவிக்கு ஒரு அசரீரி குரல் கேட்டது, “ரேணுகாதேவி,  நீ குண்டலிபுரத்தை நோக்கி செல். அங்கு ருத்ராவதாரம்கொண்ட ஜமதக்னி முனிவர் ஒருவர் இருப்பார். அவருக்கு பணிவிடை செய்து அவரையே உன் கணவராக ஏற்று கொள்.” என்றது அந்த அசரீரி. அதன்படி ரேணுகாதேவி அந்த முனிவரை கண்டறிந்து, அவருக்கு பணிவிடைகள் செய்து, பிறகு அந்த முனிவரையே திருமணம் செய்துக்கொண்டாள். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர். அதில் ஒருவர்தான் பரசுராமன் .
அசுரனான கார்த்த வீரியன், ஜமதக்னி முனிவரை தரிசிக்க வந்தான். வந்தவன், முனிவர் வளர்த்து வந்த காரம்பசுவைக் கேட்டான். காரணம், “இந்த பசுவால்தான் முனிவர் செழுமையாக வாழ்கிறார், வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு தருகிறார்” என்பதால் பசுவை அசுரன் தானமாக கேட்டான்.

அசுரன், முனிவரிடம் காரம்பசுவை கேட்க, ஜமதக்னி முனிவரோ பசுவை தர மறுத்தார். இதனால் கோபம் கொண்ட அசுரன், முனிவரை கொன்று அந்த பசுவை இழுத்து சென்றான்.
இதை கண்டு அதிர்ந்த ரேணுகாதேவி, தன் கணவரோடு உடன்கட்டை ஏற தீயில் குதித்தாள்.

வேப்பிலையை ஆடையாக அணிந்தாள்
ஆனால் விதிப்படி ரேணுகாதேவியின் ஆயுள் முடியவில்லை. இதனால் திடீரென மழை பொழிய ஆரம்பித்தது. அதனால் எரிந்துக்கொண்டிருந்த தீ அனைந்தது. ஆனாலும் ஆடை தீயில் கருகி போனது. ரேணுகாதேவியின் உடலும் தீயில் வெந்தது. உடல் முழுவதும் தீ கொப்பளங்கள். துடிதுடித்து போனாள்.
“வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இப்படி அல்லல்படும் நிலை ஆகிவிட்டதே. எந்த ஜன்மத்தில் செய்த பாவம் இது?” என்று கலங்கி, உடல் தீயில் வெந்த வேதனையில் துடித்தாள். அத்துடன், உடுத்த ஆடை கூட இல்லையே என்று வருந்தி,  யார் கண்ணிலும் படாமல் காட்டில் மறைந்து இருந்தாள்.
அந்த காட்டில்   வேப்பமரங்கள் இருந்தது. அந்த வேப்பிலைகளை ஆடையாக உடுத்திக்கொண்டு, கால் போன போக்கில் நடந்தாள். பசியால் துவண்டாள்.
பல நாட்கள் சாப்பிட எதுவும் கிடைக்காமல் பசி மயக்கத்தில் ஒரு சேரியை அடைந்தாள் ரேணுகாதேவி. அங்கு இருந்த ஒரு பெண்மணியை பார்த்து, “சாப்பிட ஏதாவது கொடுங்கள், பசி உயிர் போகிறது”. என்றாள்.
வேப்பிலையே ஆடையாக அணிந்திருக்கும்  ரேணுகாதேவியை பார்த்த சேரிமக்கள் தேவிக்கு உணவு தர பயந்தார்கள்.
“இந்த பெண்ணை பார்த்தால், உயர் குலத்தில் பிறந்தவள்போல் முக லட்சணமாக இருக்கிறாள். நாம் இந்த பெண்ணுக்கு சாப்பிட உணவை தந்தால் நமக்கோ அல்லது அந்த பெண்ணுக்கோ ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ” என்று பயந்தார்கள்.

அந்த சமயம், அந்த சேரியில் வசிக்கும் ஒரு பெரியவர், “பசி என்று வந்தவருக்கு உணவு தராமல் அனுப்புவது பெரிய பாவம். அதனால் இந்த பெண்ணுக்கு தயங்காமல் பச்சரிசி மாவு, வெல்லம் இளநீர், பானகம் கொடுங்கள்.” என்றார்.
சேரி மக்களும் அவ்வாறே உணவு தந்தனர். அந்த உணவை விரும்பி சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டாள் ரேணுகாதேவி.
சேரி மக்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட பிறகு, “இனி எங்கே செல்வது? என்று தெரியாமல் புறப்பட்டாள். அடுத்தாக, சலவை தொழிலாளர்கள் இருக்கும் பகுதிக்கு வந்தாள். இங்கு இருந்த சலவை தொழிலாளி ஒருவரின் மனைவி, ரேணுகாதேவிக்கு சேலை கொடுத்தாள்.
அந்த சேலையை உடுத்திக்கொண்டு சடலமாக இருக்கும் தன் கணவர் இருக்கும் இடத்திற்கே திரும்பி வந்தாள்.  தன் மகனான பரசுராமனிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினாள் ரேணுகாதேவி.
இதை கேட்ட பரசுராமன் கோபமாக, “கார்த்த வீரியனைக் கொன்று, அவனோடு 21 தலைமுறையிலுள்ள ஷத்திரியர்களையும் பூண்டோடு அழிப்பேன்.” என்று விண்ணுலகம் அதிரும்படி சபதம் செய்தான் பரசுராமன்.
இதை கேட்ட தேவர்களும் – அசுரர்களும் பயந்தார்கள். பரசுராமனின் சபதம் விபரீதமாக முடியும் என அஞ்சிய அவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டர்கள்.

ரேணுகாதேவிக்கு சிவபெருமான் கொடுத்த வரம்?
சிவபெருமான், ஜமதக்னி முனிவரை உயிர் பெற செய்தார். அத்துடன் ரேணுகாதேவியை பார்த்து, “நீ சக்திதேவியின் அம்சம். உன்னை வணங்கும் பக்தர்களை காப்பாற்று. நீ அனுபவித்த தீகொப்பளங்கள் அம்மைக் கொப்பளங்களாகும். இதற்கு மருந்து நீ அணிந்த வேப்பிலைதான் இனி அம்மை கொப்பளங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருந்து.
உன் பசியை போக்கிய வெல்லம், பச்சரிசிமாவு, இளநீர்தான் இனி உனக்கு நிவேதனமாகும். இதை யார் உனக்கு படைத்து வணங்குகிறார்களோ, அவர்களின் துன்பங்கள் நீங்கும். நீயே முத்துமாரியம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பாய். உன் உடல் உன் கணவரோடு சொர்கத்திற்கு செல்லும். ஆனால் உன் தலை  உன் பக்தர்களை காக்க சக்திதேவியின் பாதத்தின் கீழே  இருக்கும்.” என்று சிவபெருமான், முத்துமாரியம்மன் என்கிற ரேணுகாதேவிக்கு வரம் தந்தார்.

பீடை விலகும் பரிகாரம் என்ன?
ஆடி மாதம் ரேணுகாதேவி என்ற முத்துமாரியம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் இளநீர் அபிஷேகம் செய்யுங்கள்.
ஒருவேலை, உங்கள் வீட்டின் அருகில் முத்துமாரியம்மன் ஆலயம் இல்லை என்றால்,  சில அம்மன் ஆலயங்களில், அம்மன் பாதத்தின் கீழே ரேணுகாதேவியின் முகம் இருக்கும். அந்த அம்மனின் முகத்தை பார்த்து வணங்கி, அந்த அம்மன் மீது அணிவித்த வேப்பிலையை சிறிது வாங்கி பிரசாதமாக சாப்பிடுங்கள். அத்துடன் உங்கள் இல்லத்தில் இருக்கும் அம்மன் படத்தில் வைத்து வணங்குங்கள். தீராத கஷ்டங்களும் தீரும். உடல் பிணி நீங்கும்.
உங்கள் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது ஆலயத்திலோ வெல்லம், பச்சரிசிமாவு இந்த இரண்டையும் கலந்து மாவிளக்கு செய்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள்.
ஆடி மாதத்தில் இந்த பரிகாரத்தை செய்தாலே வருடம் முழுவதும் நோய்நொடிகள் அண்டாமல் காப்பாள் முத்துமாரியம்மன். எடுக்கும் முயற்சி வெற்றி பெறவும், திருமண தடை நீங்கவும், சுபகாரியம் நடக்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும் அருள் செய்வாள் முத்து மாரியம்மன்!.

ஆதித்ய ஹ்ருதயம்

ஜோதிட சுடரொளி Jothida Sudaroli: ஆதித்ய ஹ்ருதயம்: ஹிந்து மதத்தில் இருபெரும் இதிகாசங்கள் உண்டு. ஓன்று ராமாயணம், மற்றது மகாபாரதம்.  ராமாயணம் பெண்ணாசையால் வந்த கேட்டை சொல்வது. மகாப...

Friday, 15 July 2016

பிரபஞ்சம்

பிரபஞ்சம் உங்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறது. பிரபஞ்சமானது , மக்கள் , சம்பவங்கள் , சின்னங்கள் , சகுனங்கள் , கனவுகள் , இவைகள் மூலமாக உங்களிடம் பேசிக் கொண்டேதான் இருக்கிறது . சிலர் மட்டுமே அதன் குரலை கேட்கிறார்கள். நாம் எல்லோருமே அவ்வப் போது நடக்கும் பிரச்சனைகள் அல்லது பகல் கனவு காணுதல் அல்லது நமக்கு பிரபஞ்ச செய்தி சொன்னவரிடமே வாக்கு வாதம் செய்தல் இப்படி செய்து பிரபஞ்ச செய்திகிடைப்பதை தடுத்துக்கொள்கிறோம்! பிரபஞ்ச ஆற்றல் என்பது காஸ்மிக் கதிர்கள்தான் . இந்த காஸ்மிக் கதிர்கள் உலகில் மேலும் கீழும் பரந்து வியாபித்து சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது. நமது எண்ண அலைகள் இந்த காஸ்மிக் அலைகளின் பிரபாவத்தில் சேர்ந்து ஆற்றல்களை அதிகப்படுத்துகிறது , நம் எண்ண அலைகள் நல்லவையாக இருப்பின் நன்மையும, தீயவையாக இருப்பின் தீமையும் நமக்கு நடக்க செய்கிறது ! நம் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி , சுக துக்கங்களுக்குநம் எண்ணங்களே காரணம் ! ! எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தி எதை கேட்டாலும் தரும் . இதை எவர் ஒருவர் பூரணமாக நம்புகிறாரொ ? அவர் எதிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா வளங்களும் , நலன்களும் பெறுகிறார் !! மானுட உடலானது தெய்வீக மின் கலம் . ஞுவிட்சைத் தட்டினால் மின்சாரம் பாய்வது போலவே , உள்மனதை தட்டினால் , தெய்வீக மின்காந்த அலையானது உடலெங்கும் உள்ள நாடி நரம்புகளில் பாய்ந்து, நுண்ணுடல் , பருஉடலும் ஆரோக்கியத்தையும் , வலிமையினையும் , வல்லமைகளையும் , வீடுபேற்றையும் பெறவல்ல தாகின்னது ! ! கர்மவினைக்குக் கலங்காதே? கர்ம வினையோ.,.. தண்டனையோ .,,, அதிர்ஷ்டமோ,,,. கடவுளின் அருளோ.,,,. எதுவானாலும் மனதின் வழியாகத்த்தான் வந்தாக வேண்டும் . மனத்தின் சக்தியைப் பெருக்கி சரியான வழியில் மனத்தைப் பயன் படுத்தும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டால் கர்ம வினைகளைச் சர்வசாதாராணமாய் வெல்லலாம் .! ஒரு சித்தரின் எழுத்தில் மனம் லயித்து , அவரின் எண்ண அலைகளுடன் நாம் தொடர்பு கொள்ளும் போது , சித்தரால் விட்டது , காலத்தின் பயன் கருதி நம் மூலம் வெளிப்படும் ! இது எநதத் துறைக்கும் பொருந்தும் . ஒத்த மனமுள்ள முன்னோடிகளின் எண்ணங்களி லிருந்து நாம் எண்ணியதைத் தேடினால் அது கன்டிப்பாக கிடைக்கும் ! சித்தர்களை வரவைக்கும் மந்திரம் : ஓம் சிங்ரங் அங்சிங் மசிவசி . என்று தியானத்தால் தியானிப்பவரின் பிரான ரிதத்தில் அது உடுருவும் போது கோடிட்ட இடத்தில் அவரவர் விரும்பும் முன்னோடி தமிழ் சித்தர்களை பூர்த்தி செய்து ஏற்க்கும் போது தியானிப்பவரின் பிராணசலனம் அந்த சித்தரை வரவைக்கும் ! ! சித்தர்களால் நிரூபணமானதுதான் ! டெலிபதி : டெலிபதி எப்படி வேலை செய்கிறது? நம் எண்ண அலைகள் நம்மைச் சுற்றிலும் உள்ள ஆகாயத்தில் பரவுகிறது. நமது மனோ சக்திகளைப் பயன் படுத்தி , நம் மனத்திரையில் ஒருவரைப் பார்த்து பேசும் போது , ஆகயத்தில் பரவும் நமது எண்ண அலைகள் அவர்கள் மனதில் உடனே பரவி பதிந்து விடுகிறது. நம் ஒருவருக்கு டெலிபதி மூலம் ஒரு செய்தி அனுப்பும் போது , அவர் ஐம் புலன்களும் அடங்கி (தூக்கத்தில்) ஆழ் நிலையில் இருக்கும் போது , நம் அனுப்பும் செய்தி உடனே அவர் (ஆழ் ) மனதில் பதிந்து விடும் ! இந்த முறையில் நாம் அனேக காரியங்களில் வெற்றி அடையலாம் ! ! பிராண ஓட்டம் , இரத்த ஓட்டம், விந்தோட்டம் , மன ஓட்டம், இவைகளே சமச் சீர்ப்படுத்துவத ே குண்டலினி பயிற்சியாகும் . இதில் தேர்ந்து , சகஸ்ராரத்தில் ஊடுருவும் போது , மாவடு போல் உள்ள ஞானக்கண் எனப்படும் பீனியல் தெரபியிலிருந்து வடியும் சக்திப் பாலைப் பருகி தெய்வீகத்தை உணரும் சித்தனுக்கு , உடலை வலுப் படுத்தும் தேங்காய்ப் பால் தேவையில்லை என்பதை குதம்ம்பை சித்தர் : மாங்காய் பாலுண்டு ' , மலைமேலிருப்பார் க்குத் , தேங்காய்ப்பால் ஏதுக்கடி _ குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி" என்கின்றார் பிரச்சனைகளுக்கு கனவின் மூலம் விடை ? 1 படுக்கையில் படுத்துக் கொண்டு பார்வையை மேலே உயர்த்தி கண்களை மூடி ஆல்பா லெவல் தியானத்தில் இருக்கவும் . 2 மனதுக்குள் நான் எனது பிரச்சனைகளுக்கு விடை காண கனவில் ஒரு தீர்வைச் சொல்லவும் , நான் கனவை ஞாபகம் வைத்துக் கொள்வேன். என பலமுறை மனதுல் சொல்லிக் கொண்டே உறங்கி விடவும் . 3 காலையில் கண் விழித்ததும் நீங்கள் கண்ட கனவுகள் ஞாபகத்திற்க்கு வரும் அதன் மூலம் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்! பல நாள் முயற்ச்சி செய்ய நல்ல தேர்ச்சி அடைவீர்கள் ! மனித மூளையில் நான்கு விதமான அலைகள் உள்ளன . ஆலஃபா , பீட்டா , தீட்டா , டெல்டா . இந்த அலைகளை C,.P.S. என்ற அலரு முறையினால் அளவிடுகிறாகள். CYCLES PEF SECOND என்பதாகும் . இதை E.E.G. என்ற கருவி மூலம் அளக்க முடியும் என்பது மருத்துவ உண்மை . 1 ஆல்பா நிலை(8முதல் 12 G.P.S.வேகம்) என்பது சாதாரண மனிதர்கள் சற்று தன்னை மறந்த நிலை . 2 பீட்டா நிலை (12 முதல் 15G.P.S. வேகம்) நம்முடைய சாதாரண விழிப்பு நிலையே . 3 தீட்டா நிலை (4முதல்8 G.P.S வேகம்) இது மிக அதீத ஆழநிலைத் தியானம் சமாதி , வலிப்பு நோயினால் மயங்கும் நிலை. 4டெல்டாநிலை (4 G.P.S குறைவான வேகம்) மிக ஆழ்ந்த உறக்கம் , கோமா நிலை . இதில் சாமான்யருக்கும் அனுபவத்தால் உணரக்கூடிய நிலை ஆல்ஃபா! மன காட்சி மூலம் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றலாம் . ? நீங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று ஆசைப் படுகிறிர்களொ , அந்த மாதிரி வாழ்க்கையை உங்கள் மனதில் சினிமா பார்பது போல் அடிக்கடி பார்த்து வர வேண்டும். எதிர் காலத்தில் இது நடக்கும் என்ற உறுதியான எண்ணமும் வேண்டும் . இல்லா விட்டால் அது ஒரு பொழுது போக்குகான எண்ணமாகி தோல்வி அடைந்து விடும். . ! முழு உயிரியல் அமைப்பு, மூளை மற்றும் பூமி, அதே அதிர்வெண்கள் வேலை. இந்து மதம் மற்றும் தந்திர / யோக மரபுகள் மற்றும் பிற நம்பிக்கை அமைப்புகளில் சக்கரங்கள் நுட்பமான உடலில் ஆற்றல் புள்ளிகள் அல்லது முடிச்சு உள்ளன. அவர்கள் தமனிகள், சிரைகள் மற்றும் நரம்புகள் முக்கிய plexi உடல் சக அமைந்துள்ளதுare. சக்ரா நுட்பமான உடல், இல்லை உடல் பகுதியாக இருந்தால், மற்றும் போன்ற நுட்பமான (அல்லாத உடல்) ஆற்றல் சேனல்கள், என்று nadiis கூட்டத்தில் புள்ளிகள் உள்ளன. Nadiis நுட்பமான உடலில் சேனல்கள் இருந்தால் இதன் மூலம் வாழ்க்கை (பிராணா), அல்லது முக்கிய ஆற்றல் நகர்வுகள். பல்வேறு விவிலிய நூல்கள் மற்றும் போதனைகள் சக்கரங்கள் ஒரு வெவ்வேறு எண் முன்வைக்கின்றன. தந்திர நூல்கள் படி நுட்பமான மனித உடல் பல சக்கரங்கள் உள்ளன, ஆனால் மிக முக்கியமான ஒன்றை கருதப்படுகின்றன என்று 7 சக்கரங்கள் உள்ளன.தந்திர நூல்கள் படி நுட்பமான மனித உடல் பல சக்கரங்கள் உள்ளன, ஆனால் மிக முக்கியமான ஒன்றை கருதப்படுகின்றனஎன்று 7 சக்கரங்கள் உள்ளன. சக்ரா என்ன? கிரீடம் - தலை மேல் அமைந்துள்ள (அகிலத்தின்). நான் புரிந்துகொள்கிறேன் மூன்றாவது கண் - (அஜ்னா) நெற்றியில் அமைந்துள்ள. நான் பார்க்கிறேன் தொண்டை - (விஷூத்தி) தொண்டை மீது தலை கீழே அமைந்துள்ள. நான் பேசுகிறேன் இதயம் - மார்பு அமைந்துள்ள (அனஹட்டா). I LOVE சூரிய பின்னல் - வலது மார்பில் கீழ் அமைந்துள்ள (மணிப்புரா). நான் என்ன செய்ய நாரி - அடிவயிற்றில் அமைந்துள்ளது (ஸ்வாதிஸ்தனா). நான் உணருகிறேன் வேர் - முதுகெலும்பு அடிப்பகுதியில் அமைந்துள்ள (மூலாதார). நான் தான்.

நன்றி      சித்தர்கள் குரல