நவராத்திரி சிறப்பு 16வகையான சுண்டல் வகைகள் மற்றும் தேங்காய் பாயாசம் செய்வது பற்றி பார்ப்போம்
மகிழ்ச்சியான நேரம் சூழ்ந்த இந்த நாட்களில் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உங்கள் பொன்னான கைகளால் பக்குவத்துடன் இந்த சுண்டல் வகைகளை தினமும் ஒன்று வீதம் செய்து அவர்களுக்கு தந்து சாப்பிட செய்து அவர்கள் பாராட்டை அள்ளிச் செல்லுங்களேன்
நவராத்திரி ஸ்பெஷல் தேங்காய் பாயசம்
நவராத்திரிக்கு படைக்கும் நைவேத்தியங்களை பற்றி பார்க்கலாம்.
இன்று தேங்காய் பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய் - 2
நெய், முந்திரி, திராட்சை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
செய்முறை :
* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து வைக்கவும்.
* வெல்லத்தை துருவி வைக்கவும்.
* பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவையுங்கள்.
* ஊறவைத்த பச்சரியுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்றாகக் கொதிக்கும்போது அரைத்துவைத்திருக்கும் பச்சரிசி தேங்காய் கலவையை அதில் சேர்த்துக் கைவிடாமல் கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
* நன்றாக வெந்ததும் வறுத்த வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேருங்கள்.
* அடுத்து அதில் துருவிய வெல்லம் சேர்த்துக் கரைந்ததும் இறக்கிவையுங்கள்.
* விரும்பினால் ஆறியதும் சிறிதளவு பால் சேர்க்கலாம்.
* இனிப்பான தேங்காய் பாயசம் ரெடி.
நவராத்திரி சுண்டல் வகைகள் ஸ்பெஷல்:
1. கொண்டைக்கடலை ஃப்ருட் சுண்டல்
என்னென்ன தேவை?
முளைகட்டிய வெள்ளை கொண்டக்கடலை-ஓரு கப்,
ஆப்பிள்(சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)-ஒன்று,
மாதுளை முத்துக்கள்-2 டேபிள்ஸ்பூன்,
திராட்சைப்பழம்-20,
வாழைப்பழம்(சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)-ஒன்று,
சாட் மசாலா-ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு- ஒரு டேபிள்ஸ்பூன்,
தேன்-ஒரு டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
முளைகட்டிய கொண்டக்கடலையை சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து ஆவியில் வேக விடவும். ஒரு பாத்திரத்தில் வெந்த கடலை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள், திராட்சை, சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கினால் டேஸ்டி கொண்டக்கடலை-ப்ருட் சுண்டல் ரெடி இது, டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு.
2. சிவப்பு சோயா சுண்டல்
என்னென்ன தேவை?
உரித்த சிவப்பு சோயா பீன்ஸ்-ஒரு கப்,
இஞ்சி துருவல்-ஒரு டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய்-2,
கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு,
சோம்பு-கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
உரித்த சிவப்பு சோயா பீன்ஸை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய் தாளித்து..... இஞ்சித் துருவல், வெந்த சோயா பீன்ஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.
3. ஸ்வீட் கார்ன் சுண்டல்
என்னென்ன தேவை?
ஸ்வீட் கார்ன்-1 கப்,
பச்சை மிளகாய்-2,
புதினா, கொத்தமல்லி-சிறிதளவு,
சோம்பு-கால் டீஸ்பூன்,உப்பு, தேங்காய் துருவல்-3, டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
ஸ்வீட் கார்னை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளித்து வெந்த கார்ன், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, புதினா, தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கினால் டேஸ்டி கார்ன் சுண்டல் தயார்.
4. பட்டர் பீன்ஸ் சுண்டல்
என்னென்ன தேவை?
உரித்த பட்டர் பீன்ஸ்- ஒரு கப்,
சோம்பு-கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.
எப்படி செய்வது?
உரித்த பட்டர் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சோம்பு, கறிவேப்பில்லை, இஞ்சித் துருவல் தாளித்து வெந்த பட்டர் பீன்ஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.
5. பச்சைப்பயறு பனீர் சுண்டல்
என்னென்ன தேவை?
முளைகட்டிய பச்சைப்பயறு-ஒரு கப்,
பனீர் துருவல்-முக்கால் கப்,
இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-2, சீரகம்-கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.
எப்படி செய்வது?
முளைகட்டிய பயறை ஆவியில் வேகவுடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சித் துருவல் சேர்க்கவும். வெந்த பாசிப்பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். கரம் மசாலாத்தூள், பனீர் துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
6. கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்
என்னென்ன தேவை?
கறுப்பு கொண்டைக்கடலை- ஒரு கப்,
சோம்பு-கால் டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய்-தலா ஓன்று,
புதினா-சிறிதளவு,
காய்ந்த மிளகாய்-3,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.
எப்படி செய்வது?
கடலையை 6-8 மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் வேக வைக்கவும். வெந்த கடலையை தண்ணீரை வடியவிட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை,கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலை, தேவையான உப்பு சேர்த்துக்கிளறி, தேங்காய் துருவலை தூவி இறக்கினால் மசாலா சுண்டல் தயார். விருப்பப்பட்டால் கரம் மசாலாத்தூளும் சேர்க்கலாம்.
7. வேர்க்கடலை சுண்டல்
என்னென்ன தேவை?
பச்சை வேர்க்கடலை-ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-3,
தனியா-2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு-தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2,
டேபிள்ஸ்பூன், கறிவேப்பில்லை, கொத்தமல்லி-சிறிதளவு,
கடுகு, பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.
எப்படி செய்வது?
பச்சை வேர்க்கடலையை 3 மணி நேரம் ஊறவிவும்.பிறகு, உப்பு சேர்த்து வேகவிடவும். மிளகாய், தனியா,கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை தாளித்து, வெந்த வேர்க்கடலை, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி மேலும் சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
8. மக்காச்சோள சுண்டல்
என்னென்ன தேவை?
மக்காச்சோளம்-ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு,
சீரகம், பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை- சிறிதளவு,
தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்,
உப்பு- தேவையான அளவு.
அரைக்க:
இஞ்சி-சிறிய துண்டு,
பச்சை மிளகாய், பூண்டு பல்-தலா 2,
சோம்பு-கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்.
எப்படி செய்வது?
மக்காச் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் வேக வைகடகவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு,உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை தாளித்து..வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்புச் சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு கிளறி விடவும். 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல்தூவி இறக்கவும்.
9. சோயா பீன்ஸ் சுண்டல்
என்னென்ன தேவை?
வெள்ளை சோயா பீன்ஸ்-ஒரு கப்,
இஞ்சி-பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு, கிராம்பு,
ஏலக்காய்-தலா ஓன்று,
மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்,
தனியாத்தூள்-அரை டீஸ்பூன்,
கறிவேப்பில்லை, புதினா-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
உப்பு,எண்ணெய்- தேவையான அளவு.
எப்படி செய்வது?
சோயா பீன்ஸ் முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... கறிவேப்பில்லை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு ணிசேர்த்துக் கலக்கவும். மசாலா நன்கு கலந்தவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால் சத்துமிக்க மசாலா சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி!
10. பச்சைப்பயறு சுண்டல்
என்னென்ன தேவை?
முளைகட்டிய பச்சைப்பயறு-ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்-தலா கால் டீஸ்பூன்,
இஞ்சித் துருவல்- 2 டேபிள் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பில்லை- சிறிதளவு,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
முளைகட்டிய பச்சைப்பயறை குக்கரில் வேக வைத்து எடுக்கவும் வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பில்லை சேர்க்கவும். வேக வைத்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சத்தாடபச்சைப்பயிறு சுண்டல் ரெடி!
11. தக்காளி சோயா பீன்ஸ் சுண்டல்
என்னென்ன தேவை?
சோயா பீன்ஸ்- ஒரு கப்,
தக்காளிச் சாறு-கால் கப்,
மிளகாய்தூள்-ஒரு டீஸ்பூன்,
சீரகம்- கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை, புதினா-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
சோயா பீன்ஸை 10 மணி நேரம் ஊற வைத்து, பிறகு குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி சீரகம், கறிவேப்பில்லை, புதினா தாளிக்கவும். தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வெந்த பீன்ஸ், உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து வந்ததும் தேங்காய் துருவல் தூவி இறக்கவும். தக்காளி சுவையுடன் வித்தியாசமான சுண்டல் தயார்!
12. கோதுமை சுண்டல்
என்னென்ன தேவை?
முளைகட்டிய கோதுமை- ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா கால் டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய்-2,
தக்காளி-ஒன்று(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
வெங்காயம்-ஒன்று(நறுக்கிக் கொள்ளவும்),
கறிவேப்பில்லை -சிறிதளவு,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பில்லை சேர்த்துக் கிளறவும். வெந்த கோதுமை, உப்பு சேர்த்து, (விருப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். டயாபடீஸ் உள்ளவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.
13. கறுப்பு உளுந்து சுண்டல்
என்னென்ன தேவை?
கறுப்பு முழு உளுந்து-ஒரு கப்,
பச்சை மிளகாய்-2,
இஞ்சி-சிறிய துண்டு, சீரகம், கடுகு-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். உளுந்தை 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பில்லை தாளித்து வெந்த உளுந்து, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சோத்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த சுண்டல் இடுப்பு எலும்புக்கு பலம் தரும். பெண்களுக்கு ஏற்ற சத்தான சுண்டல் இது.
14. டிரை ஃப்ருட்ஸ் சுண்டல்
என்னென்ன தேவை?
முளைகட்டிய பச்சைப் பயறு-ஒரு கப்,
நறுக்கிய பாதாம், முந்தரி, பிஸ்தா, உலர் திராட்சை-தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
பேரீச்சை-10,
உப்பு- தேவையான அளவு.
எப்படி செய்வது?
முளைகட்டிய பாசிப்பயறை உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து , ஆவியில் வேக வைக்கவும். வெந்த பயறுடன் முந்தரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, நறுக்கிய பேரீட்சை துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும். தேங்காய் துருவல் தூவி அலங்கரிக்கவும்.
15. பார்லி வேர்க்கடலை சுண்டல்
என்னென்ன தேவை?
பார்லி-ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை-அரை கப்,
சீரகம், சோம்பு-தலா கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய்-2 நறுக்கிய கொத்தமல்லி-சிறிதளவு,
இஞ்சி துருவல்- அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
ஒரு மணி நேரம் ஊற வைத்த பார்லி, வறுத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும். எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு,பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த பார்லி, வேர்க்கடலை சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி,(விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்க்கவும். கர்ப்பிணி பெண்களுக்கும், நீர் பிரியாமல் சிரமப்படுபவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.
16.ஜவ்வரிசி சுண்டல்
நவராத்திரிக்கு பூஜை செய்யும் போது, பிரசாதமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும். ஜவ்வரிசி சுண்டல் கொடுத்தால் சற்று வித்தியாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* ஜவ்வரிசியை இரவில் படுக்கும் போதோ அல்லது 4 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். அதுவும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
* பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்த, பின் அதில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பருப்பானது நன்கு வெந்ததும், நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஜவ்வரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, குறைவான தீயில் உலர்த்த வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து ஒருமுறை கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், ஜவ்வரிசி சுண்டல் ரெடி!!!